Skip to main content

Posts

Showing posts with the label Tamizh

Udumalai.com - இணைய தமிழ் புத்தகக்கடை

வெகு எளிமையான, ஊடுருவும் விளம்பரங்கள் இல்லாமல் ஒரு அருமையான இணைய புத்தகக்கடை. உடுமலைப்பேட்டை போன்று ஒரு சிறிய நகரத்தில் இருந்துக்கொண்டு இப்படி ஒரு அருமையான இணைய புத்தகக்கடையும், அதில் இவ்வளவு ஏராளமான புத்தகத்தொகுப்பும் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன் மனுஷ்யபுத்திரனின் http://www.uyirmmai.com/ மூலம் சில புத்தகங்களை பெற முயற்சித்தேன். ஆனால் அந்த இணையம் சில மாதங்களாக செயலற்று கிடப்பது பிறகு தான் புரிந்தது. அதனோடு ஒப்பிடுகையில் உடுமலை.காம் ஒரு துரிதமான இணையமாக இருக்கிறது (இந்த இணையத்தில் புத்தகத் தேடலும் எளிமையாக உள்ளது). மற்றும் அவர்களின் வாடிக்கையாளர் சேவையும் சொல்லிக்கொள்ளும்படியாகஉள்ளது. எல்லா இந்திய இணையங்களிலும் ஆங்கிலப் புத்தகங்கள் எளிமையாக கிடைப்பது போல் ஏனோ தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை. அந்தக் குறையை நிச்சயமாக http://www.udumalai.com/  சிறிதேனும் நிறை செய்யும் என நினைக்கிறேன். இவர்கள் இச்சேவையை தொடர்ந்து இதே சிரத்தையுடன் செய்வார்கள் என நம்புகிறேன்!

உன்னைப்போல் ஒருவன் - மெய்யாலுமா?

வன்முறைக்கு வன்முறை தான் தீர்வா? பெரும்பாண்மையான கமல் ரசிகற்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட வெற்றிகரமான பட வரிசையில் இந்தப்படமும் ஒன்று என்ற போதும், இது ஒரு சராசரி மசாலா வெற்றியல்ல என்பதே எனது எண்ணம்... கமலின் நடிப்பிலோ கடமை உணர்ச்சியிலோ எந்த குறையும் மிகையும் கூறாவிடிலும், இந்தப்படத்தின் வெற்றிக்கு அவை மட்டுமே காரணமாக கூற முடியாது என்று கொளலாம். ஏனெனில் -இந்தப் படத்தின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்த கமல் கையாண்ட வியாபார உத்திகளும் வெகுஜன ஊடகங்களின் விளம்பர திறமைகளும் பெரும்பங்களித்ததை மறுக்கமுடியாது. மொத்தத்தில் இந்தப்படத்தின் வெற்றி சற்றே கவலை அளிக்கிறது! திரு ஞாநி அவர்களின் இத்திரைப்பட விமர்சனத்தை ( அவரது ஓ பக்கங்களில் ) முழுவதுமாக ஒப்புக்கொள்ளாவிடிலும், அதில் அவர் கூறியுள்ள அடிப்படை யதார்த்தத்தை கருத்தில் கொள்ளவேண்டும். மாபெரும் விளம்பர வியூகங்களினால், இத்திரைப்படம் முன்வைத்த கருத்து அநேக தமிழ் மக்களை சென்றடைந்திருக்கும். இந்த கருத்தின் பாதிப்பை சமூக அக்கறையுள்ள எவரும் அறியாமல் இருப்பர் என்பதை ஏற்றுக்கொள்வது கடினமே! அது ஏனோ தெரியவில்லை சமூக அக்கறையும் வியாபாரமும் பெரும்பாலும் முரண்தொடை...

ஜெயமோகனின் (காந்தியும் இந்தியும்)

ஜெயமோகன் அவர்களின் 'காந்தியும் இந்தியும்' கட்டுரைக்கு எனது தத்து பித்து பின்னூட்டும் அதற்கு அவருடைய மதிப்பார்ந்த பதில்களும் ( பொருமையாக, எனது பின்னூட்டத்திற்கு பதிலளித்ததற்கு அவருக்கு மிக்க நன்றி) http://jeyamohan.in/?p=4087 எனது மின்னஞ்சல்- தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் காந்தி அடைந்த நடைமுறை விவேகத்தால் தான் இந்தியை முன்மொழிந்தார் என்றே வைத்துக்கொள்வோம் . எனது சொந்த ஊர் பழனியின் அருகே உள்ள பாலசமுத்திரத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனுக்கு இந்தியைக் கற்றுக்கொள்வதற்கும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கும் என்ன வித்தியாசம் தெரியப்போகிறது ? காந்தியின் நடைமுறை விவேகம் வட இந்தியர்களுக்கும் தேவநாகிரி பரிச்சயமான பகுதிகளுக்கும் வேண்டுமானால் எளிதாக இருந்திருக்கலாம் . நீங்கள் சொல்வது போல் கணிப்பொறியின் உதவியால் கனநேரத்தில் தமிழில் வாசிக்க முடியும் காலத்தில் இணைப்பு மொழி தேவை இல்லை தான் . ஆனால் இந்த கணிப்பொறியும் நவீனமும் எதனால் முடிந்தது ? இன்றைய கணிப்பொறிஉலகில் தமிழர்கள் அடைந்த முன்னேற்றம் ( மொழியாக்க மென்பொருள் உட்பட ) எதனால்...